Thursday, May 17, 2012

காளான் பனீர் கறி

 *மொட்டுக் காளான் – 3 பாக்கெட்
      *கட்டித்தயிர் – 1 1/2 கப்
    *முந்திரிப்பருப்பு – 10
    *எண்ணெய்
    *பொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்
    *அரிந்த தக்காளி – 1 1/2 கப்
    *முந்திரிப் பருப்பு – 10
    *பெரிய வெங்காயம் – 2
    *தக்காளி – 3
    *இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
    *பச்சை மிளகாய் – 3
    *பனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது
    *மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
    *சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
    *கரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
 

*வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.காளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும். பனீரை சதுரத் துண்டுகளாக்கவும்.
*ஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
*பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.இக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
*கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.கடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.கொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment