![](http://dinakaran.com/samayalnew/S_image/sl1097.jpg)
பட்டை, கிராம்பு - தலா 2,
நறுக்கிய வெங்காயம் - 2,
ஆய்ந்த பிராக்கோலி - 1 கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கேரட் - அரை கப்,
தண்ணீர் - 4 கப்,
உப்பு, மிளகுத்தூள் -தேவைக்கேற்ப,
சீரகம் - 1 டீஸ்பூன்.
அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். பிராக்கோலியை சுத்தம் செய்யவும். அதையும், கேரட்டையும் 5 நிமிடங்களுக்கு வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும்.
கடாயை சூடாக்கி, எண்ணெயில் தாளிதப் பொருள்களைச் சேர்க்கவும். வெங்காயம், வேக வைத்த காய்கறிகள் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியும், தண்ணீரும் சேர்க்கவும் (தண்ணீர் சேர்க்கும் போது, காய்கறிகளை வேக வைக்க சேர்த்த தண்ணீரையும் நினைவில் வைத்திருந்து கவனமாகச் சேர்க்கவும்).
உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, முழுக்க வெந்ததும், சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment