மீன்களை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதன் சுவை ஊரையே அள்ளிக் கொண்டு போகும்.
Friday, April 29, 2011
Tuesday, April 26, 2011
Monday, April 25, 2011
வெல்லக் கொழுக்கட்டைக்கு
வெல்லக் கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிது. ஆனால் அதனை பலரும் பக்குவமாக செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
சூடாக பரிமாற ஆசையா
நாம் சமைக்கும் சில உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் மட்டுமே சுவையாகவும் இருக்கும். ஆனால் எத்தனைப் பொருட்களை சூடாகப் பரிமாற இயலும்.
கடுகில் கூட கலப்படம் உள்ளது
நாம் வாங்கும் மளிகைப் பொருட்கள் எடை சரியானதாக இருக்கிறதா, விலைப் பட்டியலில் விலை சரியாகப் பதிவு செய்யப்பட்டு நம்மிடம் சரியான பணம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை பொதுவாக எல்லோரும் கவனிப்பார்கள்.
Sunday, April 24, 2011
Thursday, April 21, 2011
அனைவருக்கும் நன்றி !
உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை அல்லது சமையல் வகைகளை ,செய்திகள் எங்களுக்கு எழுத விரும்பினால் இந்த முகவரிக்கு snegithiid@gmail.com கு அனுப்பவும் .உங்கள் பெயருடன் நீங்கல் விரும்பினால் புகைப்படத்துடன் வெளிய்டப்படும் .இந்த தளம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு எழுதவும்.நன்றி !..
Wednesday, April 20, 2011
Tuesday, April 19, 2011
அடை செய்யும்போது
கேழ்வரகு அடை செய்யும் போது அதில் முருங்கைக் கீரையை சேர்த்து செய்வார்கள். புது விதமாக கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவும் சேர்த்து செய்யலாம். ருசி அபாரமாக இருக்கும்.
காலை டிபனுக்கு கவனிக்க
காலையில் எழுந்து மதிய உணவுக்கு தயார் செய்வதா, காலை உணவுக்கு என்ன செய்வது என்று குழம்பிய பல பெண்கள் நேரத்தை வீணாக்கிவிடுவார்கள்.
வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1தேக்கரண்டி அரிசிமாவு அதனுடன் சேர்க்கவும்.
ஆர்ஞ்சு பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு போன்றவை தயார் செய்தபின் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்தால் சுவை கூடும்.
ஆர்ஞ்சு பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு போன்றவை தயார் செய்தபின் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்தால் சுவை கூடும்.
கேரட்டின் பயன்பாடு
உங்கள் வீட்டில் அரைத்தெடுக்கும் இட்லி மாவு மீதமாகிறதா? இப்படி இனி நீங்கள் சொல்லவே மாட்டீர்கள்.
சமையலில் ஜொலிக்க சில குறிப்புகள்
சோளம் விரைவில் பொரிய வேண்டுமானால் இளம்சுடுநீர் அதில் தெளித்து 1மணிநேரம் கழித்தப் பின்பு பொரிக்கவும்.
பச்சடி என்றால் பச்சையாக சாப்பிடுவதாம்
பச்சடி என்ற வார்த்தை பச்சை என்பதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
எரிபொருளை மிச்சம் பிடிக்க சில யோசனை
பொதுவாக உப்பு பணியாரம் அல்லது இனிப்புப் பணியாரம் மட்டும்தான் வீட்டில் செய்வார்கள். பணியாரம் செய்வது சுலபமானதும், சுவையானதும் கூட.
இட்லி மாவு மீந்துவிட்டால்
இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அரைத்த விழுதுகள் வீணாகாமல் இருக்க, ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிறகு ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள். வாரமானாலும் வீணாகாது.
நறுக்கென நாலு விஷயம்
சாதம் வடிக்கும் போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் வெண்மையாகவும், சாதம் உதிரி உதிரியாகவும் இருக்கும்.
சமைக்கும் போது கவனிக்க
பொதுவாக திராட்சையில் சாறு எடுத்தப் பின்னர் அதன் சக்கையை தூர எறிவார்கள். அவ்வாறு செய்யாமல் திராட்சை சக்கையை ஜாம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
மோர் புளித்துப் போகிறதா
மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா... பிரச்சனை மோர் தயிரில் இல்லைங்க. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் வைத்தீர்களானால் சீக்கிரம் புளிக்காது.
முருங்கைப்பூ, இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்திப்பாருங்கள். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்துப் பாருங்கள், வித்தியாசமான மணத்துடன் சூப்பராக இருக்கும். உடலுக்கும் நல்லது.
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு சாம்பாராக்கி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்க மறந்து விடாதீர்கள்.
முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
ஏலக்காய் தோலை தேயிலைத் தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் ஏலக்காய் மணத்துடன் கமகமவென்று இருக்கும்.
முள்ளங்கி வாங்கும்போது அதன் நிறம் நல்ல சிகப்பாக இருக்கும்படியாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய முள்ளங்கி எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை மிதந்தால் பழைய முட்டை.
வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
வீட்டிலேயே கேக் செய்கிறீர்களா? பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்ய தொடங்குங்கள்.
முருங்கைப்பூ, இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்திப்பாருங்கள். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்துப் பாருங்கள், வித்தியாசமான மணத்துடன் சூப்பராக இருக்கும். உடலுக்கும் நல்லது.
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு சாம்பாராக்கி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்க மறந்து விடாதீர்கள்.
முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
ஏலக்காய் தோலை தேயிலைத் தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் ஏலக்காய் மணத்துடன் கமகமவென்று இருக்கும்.
முள்ளங்கி வாங்கும்போது அதன் நிறம் நல்ல சிகப்பாக இருக்கும்படியாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய முள்ளங்கி எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை மிதந்தால் பழைய முட்டை.
வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
வீட்டிலேயே கேக் செய்கிறீர்களா? பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்ய தொடங்குங்கள்.
பிரியாணி அடிபிடிக்காமல் இருக்க
பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.
முட்டையை வேக வைக்கும்போது...
முட்டைகளை வேக வைக்கும் போது, அவை உடையாமல் இருக்க ஒரு எளிய வழி. 2 தேக்கரண்டி புளிக்காடியை (வினிகர்) வேகவைக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இது முட்டை ஓடு உடைவதை தடுக்கும்.
வீட்டில் நான் ஸ்டிக் தவா உள்ளதா?
உங்கள் வீட்டில் நான் ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.
தக்காளி நீண்ட நாள் வர...
தக்காளி பழங்களை வாங்கியதும் பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்காதீர்கள். அதற்கு பதிலாக அதன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
சமைக்கும் போது கவனிக்க
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன் படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
தயிர் புளிக்காமல் இருக்க
மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா... பிரச்சனை மோர் தயிரில் இல்லைங்க. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் வைத்தீர்களானால் சீக்கிரம் புளிக்காது.
காய்கறி, பழங்களை நறுக்கும் போது
கத்தரிக்காயை நறுக்கிய பின் சிறிது நேரம் கழித்தும் அதன் நிறம் மாறாமலிருக்க, அதன் வெட்டுப்பகுதிகளில் எல்லாம் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.
Monday, April 18, 2011
சமையலில் முட்டை
உப்பு ஜாடியிலுள்ள உப்பில் தண்ணீர் சேராமல் காணப்பட வேண்டுமானால், கொஞ்சம் சோள மாவை அந்த ஜாடியில் சேர்த்தால் போதும்.
பொடி செய்து வைக்க வேண்டியவை
சாதாரணமாக வீட்டில் செய்யும் சமையலை மிக எளிதாக மாற்றக் கூடியது நமது கையில்தான் உள்ளது. எதையும் திட்டமிட்டு தெளிவாக செய்தால் விரைவாக சமைக்கலாம்.
தோசை சரியாக வராமல் போனால்
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் போது அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை, நேரமாகிறது என்பார்கள். பிரச்சினையைப் போக்க எளிய வழி புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் சுலபமாக அரைபடும்.
எளிய குறிப்புகள் உங்களுக்காக
மாவு அரைத்த மறுநாள் இட்லி அல்லது தோசை சுடலாம். இது சாதாரண விஷயம்தான். ஆனால் அடுத்தடுத்த நாள் அதை வீணாக்காமல் விதவிதமாக டிபன் செய்ய சில ஆலோசனை.
அசைவ சமையலுக்கான குறிப்புகள்
நிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலையை எளிதாக்கும் வழிகள்
பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும். மைக்ரோவேவன் இல்லாதவர்கள் கவலைப்பட வேண்டாம். பூண்டை தண்ணீரில் ஊறவிட்டு உரித்தால் எளிதாக தோல் உரியும்.
கோடையில் அதிக கவனம் தேவை
கோடைக்காலங்களில் தயிர் சாதம் புளிப்பு ஏறாமல் இருக்க, சமைத்த சாதத்தில் புதிய தயிரை சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரையில் வைக்கவும், 2 நாட்கள் வரையிலும் தயிர் சாதம் புளிக்காது.
சமைக்கும் போது எண்ணெயில் கவனம்
தோசை சுடும் பொழுது எண்ணெயை சுற்றி வர ஊற்றினால் அதிகமாகிவிடும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வைத்து வெங்காயத்தினை முக்கி தோசைகல்லில் தேய்த்து பின்பு தோசை மாவு ஊற்றினால் சுவையும் அதிகமாக இருக்கும். அதிக எண்ணெயும் நம் உடலுக்குள் சேராது.
சமையலில் பாராட்டு மழை பொழிய வேண்டுமா
தேனீர் தயாரித்து அனைவருக்கும் கொடுக்கும் முன்பு ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
உங்களுக்கும் தெரிந்தவைதான்
வீட்டில் அடிக்கடி தேநீர் தயாரித்தாலும் சரி, எப்போதாவது தேநீர் தயாரித்தாலும் சரி, அதனை ருசியாகவும், மணமாகவும் செய்ய, இஞ்சி, சுக்கு, மிளகு, கொத்துமல்லி, ஏலக்காய் என ஏதாவது ஒன்றை சேர்த்து தேநீர் தயாரிக்கலாம். ருசி புதுவிதமாக இருக்கும்.
சமைப்பதும் ஒரு கலைதான்
புதினா புலாவ் செய்யும் போது, அரிசியுடன் சமைக்கும் முன், புதினா தளைகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து விட்டு சமைத்தால் புதினா புலாவ் சூப்பர் சுவையுடனும் மனமுடனும் இருக்கும்.
பருப்பு எளிதாக ஜீரணமாக
குக்கரில் துவரம் பருப்பை வேகவைக்கும் போது அதனுடன் கொஞ்சம் மேத்தி விதைகளை சேர்த்து விடுங்கள். அதனால் பருப்பு எளிதாக ஜீரணமாகும்.
செட்டிநாடு பிரியாணி செய்வதும் எளிது
பொதுவாக வீடுகளில் பிரியாணி செய்வது என்பது சாதாரண விஷயம். அதுவும் வேலை எளிதாக முடிய வேண்டும். அசைவ உணவாக இருக்கவும் வேண்டும் என்று நினைத்தால் அது பிரியாணிதான்.
சமையலுக்கு முக்கியத்துவம்
பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் காலை உணவையும், மதிய உணவையும் தயாரித்து விட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கான முக்கிய வேலைகளில் பாதி வேலை முடிந்து விடும்.
சமையலுக்கு ஏற்ற தக்காளி
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளித் தொக்கில் இஞ்சி, பூண்டு விழுது சேர்ப்பதை தவிர்த்தால் ருசி நன்றாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு செய்யும் போது அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்தால் ருசி அருமையாக இருக்கும்.
சந்தையில் இரண்டு வகையான தக்காளி கிடைக்கிறது. ஒன்று பெங்களூர் தக்காளி, மற்றொன்று நாட்டுத் தக்காளியாகும். பெங்களூர் தக்காளியை விட நாட்டுத் தக்காளிதான் சமையலில் ருசிக்கும் ஏற்றது, உடம்புக்கும் ஏற்றது.
சந்தையில் இரண்டு வகையான தக்காளி கிடைக்கிறது. ஒன்று பெங்களூர் தக்காளி, மற்றொன்று நாட்டுத் தக்காளியாகும். பெங்களூர் தக்காளியை விட நாட்டுத் தக்காளிதான் சமையலில் ருசிக்கும் ஏற்றது, உடம்புக்கும் ஏற்றது.
தண்ணீர் அளவு மிக முக்கியம்
சமையலில் எப்போதுமே உப்பும், தண்ணீரும் சரியான அளவில் இருப்பதுதான் மிகவும் முக்கியம்.
தண்ணீரை எவ்வளவு ஊற்ற வேண்டும், உப்பை எவ்வளவு போட வேண்டும் என்று தெரிந்து விட்டால் நீங்கள்தான் சமையல் உலகில் ராணி.
தண்ணீரை எவ்வளவு ஊற்ற வேண்டும், உப்பை எவ்வளவு போட வேண்டும் என்று தெரிந்து விட்டால் நீங்கள்தான் சமையல் உலகில் ராணி.
அவலில் என்னென்ன செய்யலாம்
பொதுவாக அவல் என்பது அரிசியில் இருந்து செய்யப்படும் ஒரு உணவுப் பொருளாகும். அவலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பரிசியில் செய்யப்படும் அவல், மற்றொன்று சாதாரண அரிசியில் செய்யப்படுவதாகும்.
சமையலறையில் இருக்க வேண்டியது
சமையலறையில் முக்கியமாக இருக்க வேண்டிய பொருள் என்னவென்று கேட்டால் அடுப்பு, பாத்திரங்கள் என்றுதான் சொல்வார்கள். ஆனால் மின் விசிறி என்பது யாருக்கும் நினைவில் வராது.
வடை ரகசியங்கள்
வடை என்றால் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. உளுந்து வடை, மசால்வடை, மிளகு வடை, உளுந்தையும், கடலைப் பருப்பையும் சேர்த்து செய்யும் வடை என பல வகைகள் உள்ளன.
Subscribe to:
Posts (Atom)