Monday, April 18, 2011

சமைய‌லி‌ல் கவ‌னி‌க்க வே‌ண்டியவை


 சமைக்கும் போது கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்ற மசாலா சாமான்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்தினால் அவற்றின் சுவைதான் கூடுதலாக தெரியும்.

உருளைக்கிழங்குகளை சமைக்கும் போது அவைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.

கோழியை துண்டாக்குவதற்கு முன் சிறிதளவு மஞ்சள் பொடியை தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் ஒரு வகை துர்நாற்றம் இருக்காது.

உலர் திராட்சையை காற்றுப்புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.

No comments:

Post a Comment